இரண்டாம் சுற்று பி.சி.ஆர். சோதனையில் ஒருவருக்குக் கொரோனா! மருதனார்மடம் கொத்தணி 110 ஆக உயர்வு
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று 426 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் இணுவில் பகுதியைச் சேர்ந்த குறித்த தொற்றாளர் மருதனார்மடம் பொதுச்சந்தையிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றுபவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முதல் சுற்றுப் பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று இல்லை எனவும், இரண்டாம் சுற்றுப் பரிசோதனையிலேயே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
இதன்படி மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பரிசோதனைக் கூடத்தில் இன்று நல்லூர், சாவகச்சேரி, சங்கானை பிரதேசங்களைச் சேர்ந்த 240 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri