வவுனியாவில் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி ஏற்றி வைப்பு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மூன்றாவது நாளாகவும் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று (01.05) சுகாதாரத்துறை சார்ந்த பலருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கு இரண்டாவது கட்டமாக 1500 தடுப்பூசிகள்
வழங்கப்பட்டுள்ள நிலையில், முதலாம் நாள் 140 நபர்களுக்கும், இரண்டாம் நாள் 321
நபர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றி வைக்கப்பட்டதுடன், இன்று (01.05) மூன்றாம்
நாளாகப் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர், வைத்தியர்கள், பொதுச் சுகாதார
பரிசோதகர்கள், சுகாதாரத் துறையினர், நோயாளர் காவு வண்டி சாரதிகள்
உள்ளிட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் ஏற்றப்படப்பட்டன.