இலங்கையர்களால் கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை தேடும் பணி தோல்வி
புதிய இணைப்பு
இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கடலுக்கு அடியில் தேடி வந்த நிலையில் தங்க கட்டிகள் கிடைக்காததால் தேடும் பணி தோல்வியில் முடிந்துள்ளது.
தமிழ்நாடு ராமநாதபுரம் - வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை அதிகாலை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்களுடன் இணைந்து வேதாளை கடலில் ரோந்து படகில் மறைந்திருந்தனர்.
இடன்போது, இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததாக சொல்லப்படும் நாட்டுப்படகு வேதாளை நோக்கி வந்து கொண்டிருந்த போது கடலில் மறைந்திருந்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் நாட்டு படகை மடக்கி பிடிக்க முயன்ற போது நாட்டு படகில் இருந்த மூவரில் ஒருவர் கடலில் குதித்து தப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசியதாக கூறப்படும் கடத்தல் தங்க கட்டிகளை தேடும் பணிகள் ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
குறித்த தேடுதல் நடவடிக்கையானது தமிழக, ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் அடுத்துள்ள வேதாளை சிங்கி வலை குச்சி கடற்றொழில் கிராம கடல் பகுதியில் இன்று (26.02.2024) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தேடும் பணிகள்
தமிழ் நாட்டின் வேதாளை சிங்கிவலை குச்சி மீன் பிடி கிராம கடல் பகுதியில் இலங்கையில் இருந்து ஒரு தொகை தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டுள்ளன.
இதன்போது, பாதுகாப்புத் தரப்பினர் குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டமையால், கடத்தல் காரர்களால் தங்கக் கட்டிகள் கடலில் வீசி தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த போதும் இதுவரையில் தங்கம் கிடைக்கப் பெறவில்லை என தெரியவருகிறது.
இதையடுத்து வட மாநிலத்தில் இருந்து கடலுக்கு அடியில் பொருட்களை தேடும் ஸ்கேனர் கருவி வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் இன்று (26) கூபா வீரர்களை கொண்டு கடலுக்கு அடியில் தங்க கட்டிகளை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


