மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO)

Mannar Fishing Sri Lanka China Sri Lanka Fisherman
By Ashik Sep 14, 2022 05:50 AM GMT
Report

காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதால் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்களை போன்றே மன்னார் - ஓலைத்தொடுவாயில் இறால் வளர்ப்பு பண்ணையினால் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் சங்க செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (13.09.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பண்ணை வளர்ப்புக்கு வழங்கப்படுவது அரச காணிகளாக இருந்தாலும் சரி, தனியார் காணிகளாக இருந்தாலும் சரி நாங்கள் ஏற்கனவே இந்த வளர்ப்பு திட்டங்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை தெரிவிக்கின்றோம்.

மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO) | Sea Workers Continue To Suffer In Mannar Alam

இறால் வளர்ப்பு திட்டம்

இந்த இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பில் பல முறைக்கேடுகள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இந்த பண்ணை வளர்ப்பு சீன கம்பனிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், இந்த பண்ணை வளர்ப்பு திட்டத்தை மன்னார் மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


குறிப்பாக மன்னாரில் இலுப்பைக்கடவை தொடக்கம் தேவன் பிட்டி வரையிலான சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இலுப்பைக்கடவை உள்ளிட்ட சில கிராமங்களில் கடற்தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO) | Sea Workers Continue To Suffer In Mannar Alam

கரையோர கடற்தொழிலாளர்கள்

அட்டை வளர்ப்பிற்காக வழங்கப்படுகின்ற காணிகள் கடற்தொழிலாளர் எதிர்காலத்தில் கடலை மட்டும் நம்பி இருக்காது கரையோரங்களிலும் தமது வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு அமைவாக குறித்த பண்ணை திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர்கள் யார், வெளிநாட்டு தலையீடுகள் இருக்கிறதா அல்லது வெளிநாட்டு கம்பனிகள் உள்வாங்கப்பட்டுள்ளதா போன்ற கேள்விகள் வெளியாகியுள்ளன.

கடலில் பிடிக்கப்படுகின்ற 75 கிராமிற்கு குறைவான அட்டைகளைப் பெற்று அதனை பண்ணைகளில் விட்டால் அந்த அட்டைகள் பெருகி உற்பத்தியாகும் என்பது உண்மை.

எனினும் இந்த கிராம கடற்தொழிலாளர்கள் நலம் பெற வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் குறித்த திட்டத்தை குறிப்பிட்ட கிராம கடற்தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

மாறாக குறித்த திட்டத்தை வெளி மாவட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கும் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

அபிவிருத்தி திட்டங்கள்

மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO) | Sea Workers Continue To Suffer In Mannar Alam

மன்னார் பகுதியை எடுத்துக் கொண்டால் இங்கு இடம்பெறுகின்ற பல அபிவிருத்தி திட்டங்களின் போர்வையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், கனிய மண் அகழ்வு போன்ற விடயங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் எம்மால் இதற்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் மன்னார் தீவு பகுதியில் அதிக நிலப்பகுதியில் கடல் நீர் உள்வாங்கப்பட்டு கடல் நீர் கிராமங்களுக்கு வரும் நிலை ஏற்படும்.

காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதால் கடற்தொழிலாளர்கள் எவ்வாறான இடர்களை சந்திக்கின்றார்களோ அதேபோன்று குறித்த இறால் வளர்ப்பு பண்ணையினாலும் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மன்னாரில் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்: என்.எம்.ஆலம் (VIDEO) | Sea Workers Continue To Suffer In Mannar Alam

குறித்த திட்டத்தை யார் முன்னெடுத்தார்களோ அவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண கடற்தொழில் இணையத்தின் செயலாளர் ஜீ. அன்ரனி சங்கர் கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US