எரிபொருள் சிக்கல்! பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள எந்தவொரு பரீட்சையையும் ஒத்திவைக்கவோ அல்லது மறு அட்டவணைப்படுத்தவோ தற்போது எந்த திட்டங்களும் இல்லை என்று கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமைகளில் சிறப்பு விடுமுறை
இது சிறப்பு அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புதன்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களின் படி இந்த சிறப்பு விடுமுறை பாடத்திட்டங்களில் பாதிப்பினை ஏற்படுத்தாது என்பதினை அமைச்சு உறுதி செய்துள்ளதாக பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
கல்வித்துறை தனது செயல்பாடுகளை தேசிய எரிசக்தி கொள்கைகளுடன் சீரமைத்து வரும் வேளையில், தற்போதைய சூழ்நிலை பரீட்சை கால அட்டவணையில் தாமதத்தை ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போதுள்ள பரீட்சை அட்டவணைகள் எந்த மாற்றம் இன்றி தொடரும் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்! இலங்கைக்கு காத்திருக்கும் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam