பாடசாலை அனுமதியின் போதான அநீதிகள்: பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கும் போது ஏதேனும் அநீதி நடந்தால் கல்வி அமைச்சுக்கு அறிவிக்குமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
தொடங்கொட பிரதேசத்தில் நேற்று(23) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் ஆகியோர் பாடசாலை அனுமதிகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.
புதிய அரசியல் கலாசாரம்
அத்துடன், இந்த புதிய அரசியல் கலாசாரம் அனைத்து மட்டங்களிலும் நிகழ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி, நாடாளுமன்றம், அமைச்சரவை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் இதனை நடைமுறைக்கு கொண்டுவர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam