ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தங்கள் தேவைகளைப் பற்றித் தெரிவிப்பதன் மூலம் கோரிக்கைகளை முன்வைக்கும் உறுப்பினர்களுக்கு இதுபோன்ற உதவித்தொகையை வழங்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் என்னென்ன சலுகைகள் அல்லது வசதிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஓய்வூதியத்தை இரத்து செய்யும் மசோதா
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
ஓய்வூதியத்தை பறிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு 512 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி