சீன அரசாங்கத்தினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புத் தொகை
கிழக்கு மாகாணத்தில் சீன அரசாங்கத்தின் பல்வேறு திட்டத்தின் முதற்கட்டமாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான அன்பளிப்புத் தொகை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கம்
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பாதுகாப்பு அறிவியல் பீட மண்டபத்தில் சீன தூதுவரினால் இந்த அன்பளிப்பு நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 150 பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏழு மாதங்களுக்கான 4.3 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பாக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக சீன குடியரசின் தூதுவர் குய் ஜென்ஹாங் மற்றும் குய் ஜென்ஹாங் உள்ளிட்ட சீன தூதுவர் காரியாலய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அன்பளிப்பு தொகை
மாதாந்தம் 4000 ரூபா வீதம் ஏழு மாதங்களுக்கு அன்பளிப்பு தொகையான 4.3 மில்லியன் ரூபாய் நிதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அன்பளிப்பு தொகையும் சீன தூதுவர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நிகழ்வில் சீன தூதரகத்தின் உத்தியோகஸ்தர்கள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கே.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அமரசிங்கம் பகீரதன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களில் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
