ஒரே நாளில் 8 பேரை தூக்கிலிட்ட சவூதி அரேபியா
சவூதி அரேபியாவில் இன்று(03) ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்கள் தொடர்பிலேயே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்களுக்கு
சவூதி அரேபியா 2022ஆம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தியது.
இதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு இத்தகைய குற்றங்களுக்கு மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று நான்கு சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
அதேநேரம் தமது தாயை கொலை செய்த சவூதி பொதுமகனும் இன்று தூக்கிலிடப்பட்டார்.
இதன்படி 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து சவூதி அரேபியாவில் 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 5 மணி நேரம் முன்

வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri
