விண்வெளி ஆய்வில் தென்கொரியாவின் அடுத்த கட்டம்: ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட் ஏவப்பட்ட மூலம் செயற்கைக்கோள்
தென்கொரியாவின் அடுத்த தலைமுறை நடுத்தர அளவிலான புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான 'நெக்ஸ்ட் ஜெனரேஷன் மிட்-சைஸ் செட்டிலைட் - 2' (No. 2), அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வேண்டன்பெர்க் விண்வெளித் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
500 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள், நில மேலாண்மை மற்றும் பேரிடர் காலங்களில் துரித நடவடிக்கை எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீனத் தொழில்நுட்பங்கள்
கொரியா ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (KAI) தலைமையிலான தனியார் விண்வெளித் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்கைக்கோள் புவியின் நிலப்பரப்பைத் துல்லியமாகப் படம் பிடித்துத் தேவையான தகவல்களை வழங்கும்.
இதன்மூலம் தென்கொரியாவின் தனியார் விண்வெளித் தொழில்நுட்பம் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படுவதோடு, பேரிடர் முகாமைத்துவத்தில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதே நாளில் தாய்வானின் ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனமும் தனது இரண்டாம் தலைமுறை குறைந்த புவி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்களை இதே ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட் மூலம் ஏவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri