சுற்றுபாதையில் வெடித்து சிதறிய செயற்கைக்கோள்
ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங்கினால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் உடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
iS-33e என்னும் செயற்கைக்கோளே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.
குறித்த செயற்கைக்கோளை இயக்குபவர், iS-33e ஆனது மொத்தமாக வெடித்து சிதறியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
வெடிப்புக்கான காரணம்
இந்நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய - பசுபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விரிவான பகுப்பாய்வை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
போயிங், அதன் வணிக விமான வணிகத்தில் வேலைநிறுத்தம் மற்றும் அதன் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சிக்கல்கள் போன்ற பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், செயற்கைக்கோள் உற்பத்தியாளரான போயிங், பிற அரசு நிறுவனங்களுடன் தரவு மற்றும் அவதானிப்புகளை பகுப்பாய்வு செய்ய ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
