மோடி - அநுரவின் மக்கள் நலன்சார் தொலைநோக்கு.. மகிழ்ச்சி வெளியிட்ட சந்தோஷ் ஜா

Sri Lanka Police Sri Lanka Police Investigation Indian High Commissioner Santosh Jha
By Rakesh May 26, 2026 05:34 AM GMT
Report

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாவனைக்காக இந்திய அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கப் ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் விசேட நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், ஜனாதிபதியுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால உள்ளிட்ட முக்கிய அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஜனவரியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.

மாகாண சபைகளுக்கான தேர்தலையே நடத்த தயங்கும் அநுர அரசாங்கம்.. எழும் தொடர் விமர்சனங்கள்

மாகாண சபைகளுக்கான தேர்தலையே நடத்த தயங்கும் அநுர அரசாங்கம்.. எழும் தொடர் விமர்சனங்கள்

134 வாகனங்கள் 

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடிந்ததையிட்டு இந்தியா மகிழ்ச்சியடைகின்றது. ஆரம்பத்தில் 80 கப் ரக வாகனங்களை மட்டுமே வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மோடி - அநுரவின் மக்கள் நலன்சார் தொலைநோக்கு.. மகிழ்ச்சி வெளியிட்ட சந்தோஷ் ஜா | Santosh Jha Proud On Present 134 Police Vehicles

எனினும், இரு தரப்பினருக்கும் இடையே நிலவிய மிக நெருக்கமான கூட்டுப் பொறுப்பின் காரணமாக, தற்போது அந்த எண்ணிக்கையை 134 வாகனங்களாக அதிகரித்து வழங்க முடிந்துள்ளது.

இது இரு நாடுகளின் சிறந்த ஒத்துழைப்புக்குச் சான்றாகும். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் வெறும் அரசியல் ரீதியானவை மட்டுமல்ல, அவை வரலாற்று ரீதியான மக்கள் பிணைப்பைக் கொண்டவை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன.

அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன. அரசுகள் என்ற ரீதியில் மக்கள் நலன்சார் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டில் முன்னெடுத்து வரும் தூய்மையான நிர்வாகம் மற்றும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வேலைத்திட்டங்களுக்குத் தேவையான இந்த உதவிகளை வழங்குவதில் இந்தியா பெருமகிழ்ச்சியடைகின்றது.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய கப் ரக வாகனங்கள் அனைத்தும் உள்ளூர் மற்றும் கிராமிய சமூக மட்டத்திலான பொலிஸ் சேவைகளை மேலும் பலப்படுத்தவும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் பெரிதும் உதவும் என நம்பப்படுகின்றது.

இவ்வாறான காத்திரமான செயற்பாடுகள் ஊடாக இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால நட்புறவும், மக்களின் பிணைப்பும் எதிர்காலத்தில் மேலும் பலமடையும்." என்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தனது உரையில் நம்பிக்கை வெளியிட்டார். 

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற விவகாரம்! சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற விவகாரம்! சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

காரில் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி மூவர் கைது..! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

காரில் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி மூவர் கைது..! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US