இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்கமுடியாது! எடுக்கப்பட்டுள்ள முடிவு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் கடந்த காலங்களில் முறையற்ற மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமையால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதனால் நல்லூர் ஆலயத்திற்கு கூட இனிமேல் மணல் மண் விநியோகிக்கமுடியாதென்று பருத்தித்துறை பிரதேச செயலர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம்(29) தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முறையற்ற மணல் அகழ்வு
மேலும் தாம் நல்லூர் ஆலயத்திற்கு மணல் மண் வழங்குவதற்கு எதிரானவர் அல்ல என்றும், கொட்டோடை கிராமம் கடந்தகால முறையற்ற மணல் அகழ்வினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய சூழல் பாதிப்பு காரணமாகவே மக்கள் நல்லூரான் ஆலயத்திற்கு மணல் மண் வழங்க மறுத்ததாகவும் தெரிவித்தார்.
இதேவேளை அம்பன் கொட்டோடை வீதி பயன்படுத்துவதற்க்கான அனுமதி கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக கேட்டபோது தமது சபைக்கு சொந்தமான வீதி மணல் மண் ஏற்றிச்சென்றால் சேதமடையும் வீதிக்கான இழப்பீட்டை பெறுவதற்காகவே தான் அனுமதி கொடுத்ததாகவும், மணல் மண் ஏற்றுவதற்க்கு தான் எதிரானவன் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த அம்பன் கொட்டோடை வீதியானது கனரக வாகனங்கள் செல்வதற்கு பிரதேச சபையால் தடைசெய்யப்பட்ட வீதி என்பது குறிப்பிடதக்கது.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri