சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான முக்கிய காரணத்தை வெளியிட்ட பொலிஸார்
கடந்த 25 நாட்களில் கட்டுநாயக்க நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (26.01.2024) காலை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சாரதியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் விபத்தில் உயிரிழந்ததன் மூலம் இந்த விடயம் தெரியந்துள்ளது.
கொழும்பில் இருந்து கட்டுநாயக்க வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
நிலத்தடி மின் கம்பி
எனினும் போதைக்கு அடிமையானவர்கள் நிலத்தடி மின் கம்பிகளை அறுத்துள்ளமையினால் தற்போது வீதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருட்டுகளை தடுக்க அதிகாரிகள் முயற்சித்த போதிலும், தற்போது நடந்து வரும் இந்த செயலால் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.
அதற்கமைய, இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளின் உயிரிழப்புக்குக் காரணம் மிகவும் இருண்ட தன்மையா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
