சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் (Sanath Nishantha) வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹலவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 68 சந்தேகநபர்களையும் விடுதலை செய்ய ஹலவத்தை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு தீர்மானித்துள்ளதாக சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுவினி பெரேரா தெரிவித்துள்ளார்.

வழக்கின் சாட்சிகள் உயிரிழப்பு
இந்த வழக்கின் சாட்சிகள் இருவர் உயிரிழந்தமை மற்றும் பொலிஸார் சாட்சியங்களை நீதிமன்றில் முன்வைக்க தவறியதன் காரணமாக சந்தேகநபர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 39 நிமிடங்கள் முன்
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam