ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சீ.ஐ.டி.யில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இன்று விசாரணை ஒன்றுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நல்லாட்சிக் காலத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலம் தொட்டு சமன் ஏக்கநாயக்க அவரது உத்தியோகபூர்வ செயலாளராகப் பணியாற்றியிருந்தார்.
சுற்றுப் பயணங்கள்
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு ஜனாதிபதி செயலக நிதி மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

அது தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேராவும் நேற்றைய தினம் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri