அநுர அரசின் நடவடிக்கையால் கொழும்பிலுள்ள உணவகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
கொழும்பிலுள்ள உணவகங்களில் பணிபுரிந்த மலையகத்தை சேர்ந்த பல இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு தோட்டத் துறைக்கு வேலைக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஹோட்டல்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்ததால், பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த பலர் உணவகங்களில் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
உணவக பணியாளர்கள்
அரசாங்கம் சமீபத்தில் தோட்டத் தொழிலாளியின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது.

இதனையடுத்து பொரளை, மருதானை உட்பட கொழும்பில் உள்ள பல உணவகங்களில் பணியாளர்கள், சமையல்காரர்கள் மற்றும் பிற சேவை ஊழியர்களாகப் பணியமர்த்தப்படுபவர்களில் பெரும்பாலோர் தோட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan