அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்! அரச வாகனங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்
அரசாங்க வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்குப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையிலான சுற்றுநிருபமொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்குப் பயன்படுத்துவது, உரிய நபர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் பயன்படுத்துவது குறித்த கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தது.
எனினும், தற்போதைக்கு அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டவுடன் தேசிய மக்கள் சக்தியின் முன்னைய நிலைப்பாடு முற்றாக மாற்றமடைந்துள்ளது.
சுற்றுநிருபம்
அதன் பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவும், அவர்களின் மனைவி, பிள்ளைகள் பயன்படுத்தவும் அனுமதியளிக்கும் வகையிலான சுற்றுநிருபமொன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க குறித்த சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களின் உத்தியோகபூர்வ சாரதிகள் இல்லாத நேரங்களிலும் குறித்த வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
