சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு குறித்து எழுந்துள்ள கடும் விமர்சனம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேர்தல் ஆணையகத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு, இந்த விடயத்தை ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அதுவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறித்தே, தாம் அதிருப்தி அடைவதாக பெப்ரல் குறிப்பிட்டுள்ளது.
அஞ்சல்மூல வாக்களிப்பு
முன்னதாக, சில மாதங்களுக்கு முன்னர், அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைக் கோரியபோது, அரசாங்கம் எப்படி முழுக் கண்மூடித்தனமாக இருந்தது என்பதை பெப்ரல் நினைவுகூர்ந்துள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் தற்போதைய சம்பள உயர்வு அறிவிப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும்போது மாதத்திற்கு 20 பில்லியன் ரூபாய்கள் மேலதிக செலவு ஏற்படும்.
எனினும், நாட்டின் மோசமான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் இந்த முடிவின் சாத்தியக்கூறு குறித்து பெப்ரல் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
