இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண வருபவர்களுக்கான தடை! மீறினால் சட்ட நடவடிக்கை
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய(15.02.2026) போட்டியைக் காண வரும் ரசிகர்களுள் ஒழுங்கினை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்டும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இன்று(15.02.2026) மாலை 07 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,
போட்டியைக் காண வருவோர் மைதானத்திற்குள் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி போத்தல்களை கொண்டு வர வேண்டாம். குடிநீர் வசதி மைதானத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மதுபானம் அருந்திய நிலையில், அல்லது ஒழுங்கினை சீர்குலைக்கும் வகையில் நடந்த கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், பெரிய பணப்பைகள், தலைக்கவசம், ஜெக்கட்டுகள், மதுபானம், இசைக்கருவிகள், ட்ரோன் சாதனங்கள், கத்தி போன்ற கூர்மையான பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை மைதானத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கெத்தாரம, மாவத்தை சந்திப்பில் இருந்து மற்றும் வில்சன் பெரேரா மாவத்தை வழியாக பிரிட்டோபப்பா புல்லே சந்திப்பிற்கு எந்தவொரு வாகனத்திற்கும் நுழைய அனுமதி இல்லை.
கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி பத்திரம் கொண்ட வாகனங்கள் மட்டுமே அந்த சந்திப்புக்கள் வழியாக நுழையலாம்.
வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை அரச சொத்துக்கள்! சிக்கலில் இருந்து தப்பிக்க நாமல் தீட்டும் சதித்திட்டம்
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri