வடக்கின் எல்லையில் நின்று கிழக்கினை கண்காணித்த சஜித்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கொக்கிளாய் பகுதியில் வசித்து வரும் மக்களின் நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு - கொக்கிளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலைக்கு மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறையினை திறந்து வைத்த அவரிடம் கொக்கிளாய் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொக்கிளாய் முகத்துவாரம் பகுதிக்கு அவர் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, வடக்கு - கிழக்கு மாகாணத்தின் எல்லை பகுதியாக காணப்படும் கொக்கிளாய் - புல்மோட்டை கடல் இணைப்பிற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மக்களின் கோரிக்கை
கொக்கிளாய் பகுதியில் வசித்து வரும் பெரும்பான்மை மக்கள் தங்களின் காணிப்பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை போன்றவற்றை சஜித் பிரேமதசவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மேலும், வடக்கினையும் கிழக்கினையும் இணைக்கும் கொக்கிளாய் பாலம் இல்லாத நிலையில் மக்களின் கடல் போக்குவரத்தின் சிரமத்தினையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த ட்ரக்: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
