புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயாராகும் சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் (NPP) முற்போக்கான பிரிவுகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயாராக உள்ளார்.
இந்த தகவலை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா இன்று தெரிவித்துள்ளார்.
பிரதமரை சிக்கலில் சிக்க வைத்து
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுப்ரீம்சாட் நாடகத்தால் அதிர்ந்துவிட்டது போல் தெரிகிறது.
தேவை ஏற்பட்டால், அரசாங்கத்தில் உள்ள முற்போக்கான பிரிவுகளுடன் சேர்ந்து புதிய அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
அமைச்சர் வசந்த சமரசிங்கவின் முயற்சி, பிரதமர் ஹரிணி அமரசூரியவை சிக்கலில் சிக்க வைத்து, அவர் ஒரு திறமையற்றவர் என்பதைக் காட்டுவதாக இருக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பெரேரா கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



