அநுரவுக்கு பாலாபிஷேகம் செய்த மக்கள்.. ஏப்ரலில் நடக்கவுள்ள ஆட்சி கலைப்பு
பெருந்தோட்ட பகுதி மக்களின் சம்பள உயர்வை தொடர்ந்து, குறித்த மக்களிடம் இருந்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு தொடர்ந்து நன்றி தெிரிவிக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம், அண்மையில் ஜனாதிபதி, நுவரெலியா சென்றிருந்த போது, நானுஓயா பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த தோட்ட தொழிலாளிகளை சந்தித்திருந்தார்.
இதன்போது, அவர்களுடன் உரையாடிய அவர், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்திருந்தார்.
இதனை தொடர்ந்து, மலையக தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது எனலாம்.
இந்நிலையில், நேற்றைய தினம், குறித்த மக்கள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
இவ்விடயம் மிகவும் பேசுபொருளாகியுள்ளது, ஏனெனில் இலங்கையில் ஜனாதிபதி ஒருவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறு பாலாபிஷேகம் செய்வது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்படுகின்றது.
இவை உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri