மர்மங்களை சுமந்து வரும் எப்ஸ்டீன் விவகாரம்.. 2008இல் மாயமான சிறுமி குறித்து பரபரப்பு தகவல்
2007ஆம் ஆண்டு மே மாதத்தில் காணாமல் போன சிறுமியின் பெயர் எப்ஸ்டீன் கோப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு போர்த்துக்கலில் விடுமுறைக்கு சென்றிருந்தபோது, மூன்று வயது சிறுமியான மெட்லின் மெக்கான் காணாமல் போய் சுமார் 18 வருடங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் இருந்த பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
18 வருடங்கள்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட விரிவான ஆவணத் தொகுப்பில், எப்ஸ்டீனின் கூட்டாளியான Ghislaine Maxwell 2021ஆம் ஆண்டு பெற்ற தண்டனை தொடர்பான பதிவுகளும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாவணங்களில் ஒரே ஒரு சாட்சியக் கூற்று மட்டுமே மெட்லின் பெயரை குறிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
من ملفات إبستين
— ألأحداث ألإيرانية بالعربية (@iranin_arabic) February 13, 2026
الاختفاء والاختطاف
قضية الطفلة البريطانية مادلين ماكان، التي اختُطفت في سن الثالثة في برايا دا لوز، البرتغال، عام 2007 pic.twitter.com/2WuryZx1gz
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அதிகாரிகள், இந்த குறிப்பானது உறுதியான ஆதாரமாக கருதப்பட முடியாது என்றும், மெட்லின் காணாமல் போன சம்பவம் எப்ஸ்டீன் குற்ற வலையமைப்புடன் தொடர்புடையது என நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், 2009ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட அந்த கூற்றில், பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் செப்டெம்பர் மாதத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை விவரிக்கிறார்.
மெட்லினின் பெயர்..
அவர் ஒரு பிரபல சாலையில் நடந்துச் சென்றபோது, ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் முன்னால் நடந்துச் சென்றதாகவும் சில மீட்டர்கள் முன்னால் நடுத்தர வயதுடைய ஆணும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சிறுமி மெட்லின் மெக்கானைப் போலத் தோன்றியதாக சாட்சி கூறுகிறார். பெண் அந்த சிறுமியை விரைவாக இழுத்துச் செல்ல முயன்றதாகவும், தன் இருப்பால் அவர் பதற்றமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுமி முழு நேரமும் தன் வலது கண்ணை கையால் மூடியபடி நடந்ததாகவும், அடிக்கடி திரும்பிப் பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நேரம் கழித்து சாட்சியான நபர் அங்கிருந்து விலகிச் சென்றதாகவும், பின்னர் ஒரு இணையதளத்தில் இந்தக் காட்சியை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், பல ஆண்டுகள் கழித்து சமூக வலைதள பதிவை பார்த்தபின் பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.