விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிவிட்டு இன்று நட்டாற்றில் கைவிட்டுள்ளது அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Economy of Sri Lanka Farmers Issues
By Rakesh Jun 19, 2026 08:33 AM GMT
Report

"விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, இன்று ஒட்டுமொத்த விவசாயிகளையும் நட்டாற்றில் கைவிட்டு விட்டது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

CIFL நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் நேற்று(19.06.2026) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்

உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்

விவசாயிகளின் பன்முகப் பிரச்சினைகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தற்போதைய அரசு எதிர்க்கட்சியில் இருந்த சமயம், நாட்டு மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் சிந்திய கண்ணீரை இன்று சிந்துவதாகத் தெரியவில்லை.

தற்சமயம் ஒட்டுமொத்த விவசாயிகளும் விதை, உரம், விவசாய இரசாயன நாசினிகள் மற்றும் விவசாய உபகரணங்களின் விலையேற்றம், யானை - மனித மோதல்கள், அறுவடைக்கு நிலையான விலை இல்லாமை போன்ற பன்முகப் பிரச்சினைகளுக்கும் இடர்பாடுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிவிட்டு இன்று நட்டாற்றில் கைவிட்டுள்ளது அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு | Sajith Accuses Anura Government Abandoning Farmers

தங்களது நகைகளை வங்கிகளில் அடகு வைத்து, கடுமையான உற்பத்திச் செலவுக்கு மத்தியில் விவசாய உற்பத்தி நடவடிக்கைகளைச் செய்து வந்த விவசாயிகளுக்கு, இறுதியில் அவர்கள் எதிர்பார்க்கும் நியாயமான விற்பனை விலை கிடைக்காத அவல நிலையே இந்த அரசிலும் நீடிக்கின்றது.

கூடிய உற்பத்திச் செலவில் விளைவிக்கப்பட்ட பொருள்களை உரிய சந்தைப் பெறுமானத்துக்கு விற்றுக் கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

17 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்ட ஒரு மூட்டை உரத்தை 10 ஆயிரத்து 200 ரூபாவுக்குப் பெற்றுத் தருவோம் என்று தற்போதைய விவாசாய அமைச்சர் வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்று நாட்டில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவுவதுடன், உரம் இல்லாத இடங்களே பெருமளவில் காணப்படுகின்றன.

அறுவடைக்கான நியாய விலை 

விவசாய நடவடிக்கைகளுக்கான செலவீனங்கள் வானளாவிய ரீதியில் உயர்ந்து காணப்படும் போதிலும், இன்று அறுவடைக்கு நியாயமான விலை இல்லை.

தற்போதைய அரசின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இருந்த சமயத்தில், வயல்களுக்குச் சென்று அமர்ந்துகொண்டு 'ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம்' என்று பிரஸ்தாபித்தனர்.

இன்று அந்த விலை விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. தற்சமயம் அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளன. ஆனால், அங்கு ஒரு கிலோ நெல் வெறும் 70 முதல் 80 ரூபா போன்ற மிகக் குறைந்த விலைக்கே தற்போது விற்பனையாகின்றது.

விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிவிட்டு இன்று நட்டாற்றில் கைவிட்டுள்ளது அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு | Sajith Accuses Anura Government Abandoning Farmers

மறுபுறம், யானை - மனித மோதலினால் விவசாயிகளின் அறுவடைகளும் சொத்துக்களும் தொடர்ச்சியாகச் சேதமடைந்து வருகின்றன. இதனால் மனித உயிர்கள் மட்டுமன்றி யானைகளின் உயிர்களும் அழியும் இந்த வேளையில், அன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த ஆளும் தரப்பினரை இன்று களத்தில் எங்குமே காண முடியாமல் போயுள்ளது.

அன்று முரசு கொட்டி விவசாயிகளுக்காக அவர்கள் சிந்திய கண்ணீர், இன்று வெறும் முதலைக் கண்ணீராக மாறியுள்ளது.

விவசாய மக்கள் இன்று கண்ணீர் சிந்துமளவுக்கான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, போதுமான உணவைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் நாட்டில் மந்தபோசண நிலை அதிகரித்து வருகின்றது.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் - குற்றவாளிகளை இலக்கு வைக்கும் அரசாங்கம்

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் - குற்றவாளிகளை இலக்கு வைக்கும் அரசாங்கம்

வறுமை நிலை

வறுமை காரணமாகப் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியும் கூடச் சீர்குலைந்து போயுள்ளது. இந்த ஏமாற்று அரசியல் நாடகத்தால் விவசாயிகளும், பொதுமக்களும் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு காலத்தில் இயற்கை உரம் என்ற பெயரில் தரமற்ற கழிவு உரங்களை வழங்கி இந்த நாட்டின் விவசாயத்தை அழிக்கும் துரோக நடவடிக்கைகள் கடந்த காலங்களில் நடந்தன.

விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிவிட்டு இன்று நட்டாற்றில் கைவிட்டுள்ளது அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு | Sajith Accuses Anura Government Abandoning Farmers

இன்றும் கூட விவசாயிகளுக்குத் தரமான உரம் கிடைப்பதில்லை. விவசாயிகளை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசாங்கங்களும் அவர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளையே செய்துள்ளன.

இந்த அரசும் அதே பாதையில்தான் பயணிக்கின்றது. விவசாயிகளின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே இன்றும் என்றும் முன்னிற்கும்.

விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபா உத்தரவாத விலை கிடைக்கும் வரை, அவர்களுக்காக நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் தொடர்ந்து நாம் முன்னின்று குரல் கொடுப்போம்" என சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிவிட்டு இன்று நட்டாற்றில் கைவிட்டுள்ளது அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு | Sajith Accuses Anura Government Abandoning Farmers

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய பெண் - வெளியான அதிர்ச்சி தகவல்

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கான பணமோசடியில் சிக்கிய பெண் - வெளியான அதிர்ச்சி தகவல்

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US