உயிரிழந்த பல்கலை மாணவன்: பொலிஸ் நிலையத்தில் குவியும் சக மாணவர்கள்
உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சரித் தில்ஷான் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 5 பேர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.
குறித்த வாக்குமூலங்களை சமனல ஏரி பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், மாணவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 16 பல்கலைக்கழக மாணவர்களை இன்று(02.05.2025) பொலிஸாரிடம் சரணடையுமாறு கூறப்பட்டுள்ளது.
உடனடி விசாரணைகள்
புஸ்ஸல்லாவ உலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான சரித் தில்ஷான், கடந்த 29ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள், குறித்த மாணவனின் ஆடைகளை களைந்து பகிடிவதை மேற்கொண்டமையினால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாகவே மாணவன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இறந்த மாணவனின் உறவினர்கள் புஸ்ஸல்லாவ பொலிஸாரிடமும் முறைப்பாடு அளித்திருந்தனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
