மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சித்த புடின்

United Russia Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Jenitha Oct 01, 2022 12:43 PM GMT
Report

இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலகம் விரும்புவதாகவும், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம் கொடுக்காது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிகிட்டத்தட்ட 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினரின் குண்டுவீச்சுக்கு ஆளாகி வருகின்றன.

தீவிரமடையும் போர் 

மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சித்த புடின் | Russian President Vladimir Putin Western World

இதனால் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை வீட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இந்நிலையில் தற்போதை போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமாக வருகிறது.

போர் விதிமுறைகளை மீறும் ரஷ்யா

மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சித்த புடின் | Russian President Vladimir Putin Western World

போர் விதிமுறைகளை மீறி ரஷ்யா பள்ளிகள் வழிபாட்டுத்தளங்கள் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வரும் நிலையில் போர் விதிமுறைகள் மீறப்படவில்லை என ரஷ்யா மறுத்து வருகிறது.

உக்ரைனுக்கு அடுத்து உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வரும் நிலையில், அமெரிக்க பலமுறை பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மில்லியன் டொலர் கணக்கில் உதவி வருகிறது.

ஆனால் இந்த கோர பேரழியிவில் இருந்து உக்ரைன் மீளுமா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்யா வசம் வந்துள்ள நிலையில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள லூஹன்ஸ்க், டெனட்ஸ்க், கர்சன், ஜெப்ரோஸியா உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ளப் போவதாகவும் இதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படும் என ரஷ்ய அறிவித்திருந்தது.

மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சித்த புடின் | Russian President Vladimir Putin Western World

நான்கு பிராந்தியங்களில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அது ரஷ்யாவுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதால் இந்த சர்வதேச கோட்பாடுகளை மீறி வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது என மேற்கத்திய நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தன.

அதனையும் மீறி வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 27 ஆம் திகதி பொது வாக்கெடுப்பு நிறைவடைந்த நிலையில் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே ரஷ்யாவுக்கு சாதகமாகவே வந்திருக்கின்றன.

இதைத் தொடர்ந்து உக்கரைநாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களையும் ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வதாக அதிபர் விளாடிமிர் புடின் அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளார்.

மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்கிரனின் நான்கு பகுதிகளையும் ரஷ்யாவின் பகுதிகளாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

மேலும் இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலகம் விரும்புவதாகவும், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம் கொடுக்காது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய புதின்," ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலக நாடுகள் விரும்புகின்றனர். ஏற்கனவே இந்தியா போன்ற நாடுகளை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். ஆனால் ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலக நாடுகளை அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் சோவியத் யூனியனை மீண்டும் கட்டியெழுப்பவும் ரஷ்யா முயற்சிக்கவில்லை 

ரஷ்யா

கடந்த காலங்களில் சோவியத் தலைவர்கள் மிகப்பெரிய நாடாக இருந்த ரஷ்யாவை அழித்துவிட்டார்கள். கடந்த காலத்தை மீண்டும் கொண்டுவர முடியாது. ரஷ்யாவுக்கு அது தேவையும் இல்லை. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் அவற்றின் அதிகாரத்தை எங்கள் மீது காட்ட முயன்றது.

அவர்களின் ஆணைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் பசி குளிர் விரக்தி நிறைந்த 90 ஆம் ஆண்டு காலகட்டங்கள் என பலவற்றையும் மீறி ரஷ்யா விடாமுயற்சியுடன் புத்துயிர் பெற்று மீண்டும் வலிமை சேர்த்துக் கொண்டு இந்த உலகில் தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கிறது" என தெரிவித்துள்ளார். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US