டொனால்ட் ட்ரம்பை சீண்டும் புடின்! உக்ரைன் மீது மீண்டும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைன்(Ukraine) இராணுவ பயிற்சி மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுள்ளதுடன் 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஏவுகணை மூலம் தாக்குதல்
செர்னிவ் பிராந்தியத்தில் ஹோன்சரிவ்ஸ்கே அருகே உள்ள உக்ரைனின் 196ஆவது பயிற்சி மையத்தில் இரண்டு இஸ்கந்தர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 200 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துளளது. இதற்கிடையே 78 ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட 8 ஜெட்-பவர்டு (jet-powered) ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு காலக்கெடு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேலாகிய நிலையில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை.
இதனால் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ரஷ்யாவுக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.
அந்த காலக்கெடுவுக்குள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிடில், கடுமையான தடைவிதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த போதிலும், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri