நேட்டோவை குறிவைக்க காத்திருக்கும் ரஷ்யா..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முக்கிய அதிகாரி
2029ஆம் ஆண்டுக்குள் நேட்டோ நாடுகளின் கிழக்கு பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என ஜெர்மனியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலுக்குத் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் இலக்கு
அத்துடன், ஆண்டுதோறும் 1,500 பீரங்கிகளையும் மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகளையும் உற்பத்தி செய்வது உட்பட ரஷ்யாவின் இராணுவ கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த இருப்புக்கள் உக்ரைன் போருக்கானது மாத்திரமல்ல எனவும் அவை நேட்டோ உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இருக்கலாம் எனவும் அவர் கருதுகின்றார்.

போலந்துக்கும் லிதுவேனியாவிற்கும் இடையிலான மூலோபாய ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பகுதியான சுவால்கி இடைவெளியை ரஷ்யா இலக்கு வைக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri