ரஷ்யாவின் புதிய தாக்குதல் திட்டம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷ்யா புதிய இராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் தரப்பு எச்சரித்துள்ளது.
போர்நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சில கருத்துக்களை முன்வைத்தபோது மேற்கண்ட விடயத்தையும் கூட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்து 3 வருடங்களை கடந்தும் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலானது இன்னும் நீண்டு வருகிறது.
போர் நிறுத்தம்
இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கமைய 30 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதன்படி ஜெலன்ஸ்கியும், ரஷிய ஜனாதிபதியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தைக்கான நிலை
இதன்படி பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷயா புதிய இராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்யா பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, இன்னும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது என்றும், புடின் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam