உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை முறியடித்து அதிரடி காட்டும் ரஷ்யா
கருங்கடல் பகுதியில் உக்ரைனின் 8 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதுடன் அவற்றின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியால் 18 மாதங்களாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் சமீப காலமாக இரு தரப்பினருக்குமிடையில் ட்ரோன் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள ட்ரோன்கள்
அதன்படி ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இதனை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதேவேளை, கிரீமியா அருகே உள்ள கருங்கடல் பகுதியில் உக்ரைனின் 8 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு! உறவினர்களை கடத்திய TMVP (VIDEO)

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
