தம்பியை கடத்திய பிள்ளையான்: ஊடகவியலாளர் பரபரப்பு வாக்குமூலம்(Video)
பிள்ளையானால் தனது தம்பி காணாமலாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு ஊடகவியலாளர் தேவபிரதீபன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (11.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக தான் நீண்ட நாட்கள் தலைமறைவாகி வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார்.
பிள்ளையான் தரப்புடன் இணைந்து தனது தம்பியை செயற்பட கோரி வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததன் காரணமாக தனது தம்பி காணாமலாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri