மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பாளர்களின் பட்டிகளில் உள்ள 40 மாடுகள் திருடிச் செல்லப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25000 ரூபா சன்மானமாக வழங்கப்படும் எனவும் அவர்கள் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா நிறுவகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கால்நடை வளர்ப்பு பண்ணையாளரும், வர்த்தகரும், ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மாடு திருட்டு
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட 15 பேருக்கு மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர் மாடு மற்றும் ஆடுகளை ஜீபோனவாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிகளில் நள்ளிரவில் சொகுசு வாகனங்களான கே.டி.எச். ரக வான், மூடிய பட்டா ரக லொறி, கார் போன்ற வாகனங்களின் திருடர்கள் மாடுகள் ஆடுகளை திருடிச் சென்று ஏறாவூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று அதனை வெட்டி இறைச்சியாக்கி வருகின்றனர்.
இந்த மாடுகள் திருட்டு தொடர்பாக கொக்குவில் பொலிஸாரிடம் பல முறைப்பாடு செய்திருந்த போதும் இந்த திருட்டுக் கும்பலை இதுவரை கைது செய்யவில்லை.

நீதிமன்றில் வழக்கு
அதேவேளை கடந்த இரண்டு வருடத்திற்கு மன்னர் 4 மாடுகள் திருட்டுப் போன நிலையில் ஏறாவூர் பகுதியில் மாடு அறுக்கும் மடுவத்தில் இருந்து ஒரு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய நிலையிலும் 3 மாடுகளை உயிருடனும் மீட்டதுடன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை கடந்த சுதந்திர தினத்திற்கு முன்தினமான 3ம் திகதி இரவு பட்டியில் இருந்த கன்றுதாச்சியான பசுமாடு உட்பட 4 மாடுகள் திருட்டுப் போயுள்ளன. இவ்வாறு நாளாந்தம் தொடர்ச்சியாக எங்களது மாடுகள் திருட்டுப் போகின்றது.
மாடுகள் திருடப்படுவதால் கால்நடைவளர்ப்பு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் மாடு திருட்டில் ஈடுபடுவர்களை கண்டால் அவர்களை பிடித்து தருபவர்களுக்கு சன்மானமாக 25 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.