முல்லைத்தீவில் வங்கி ஒன்றில் திருட்டு: இளைஞன் கைது
முல்லைத்தீவில் வங்கியொன்றில் இடம்பெற்ற திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று(20.04.2025) இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு கூட்டுறவு கிராமிய வங்கி(CRB) கடந்த 17ஆம் திகதி கூரைபகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றும்(I phone), 52,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அதனையடுத்து, குறித்த வங்கி நிர்வாகத்தினரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து, குறித்த கிராமிய கூட்டுறவு சங்கத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவியின் உதவியுடன் திருடப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரின் முகநூலில் போடப்பட்ட தொலைபேசி பதிவினையும் அடித்தளமாக கொண்டு நேற்றையதினம்(20.04.2025) குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்காெண்டு வருகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
