பிள்ளையானின் நெருங்கிய சகாக்கள் உசைன் - ஜெயந்தனால் சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்
பிள்ளையானின் கைது பல சந்தேகங்களையும் விவாதங்களையும் எழுப்பியுள்ள நிலையில், இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பிள்ளையானோடு முடித்து தமிழ் சமூகத்தை அந்நியப்படுத்துவதில் தேசிய மக்கள் சக்தி, கத்தோலிக்க திருச்சபை என அனைவரும் தீவிரமாக இருப்பதாக தெரிகின்றது.
இந்த நிலையில் பல ஐயங்கள் தற்போதைய சூழ்நிலையில் எழுந்துள்ளன. ஏன் இந்த விடயம் தொடர்பில் முறையானவர்கள் விசாரிக்கப்படவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த பிறகு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கு ஆயுதங்கள் பரிமாறப்பட்டதாக பேசப்படுகின்றது.
T-56 ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிலிருந்து வழங்கியதாகவும், அதற்கு எந்த பதிவுகளும் இல்லையென்றும் கூறப்படுகின்றது.
மேலும், பிள்ளையானுடன் தொடர்பிலிருந்து குற்றப்புலனாய்வுத்துறையில் சரணடைந்த உசைன், பிள்ளையானின் சாரதி ஜெயந்தன் ஆகியோருடனான விசாரணையின் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.
உசைன் - ஜெயந்தனின் சாட்சியங்கள் முக்கியமாக மாறப்பபோகின்றது. கைதுகள் தொடர போகின்றது...
இந்த விடயங்களை தாங்கி வருகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி......
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
