மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை (Mervyn Silva) மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மே 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் மூன்று பேரை மே 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திறந்த பிடியாணை
கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, மார்ச் 05 ஆம் திகதி மேர்வின் சில்வாவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்திருந்தது.

அத்துடன் தற்போது தலைமறைவாக உள்ள பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மற்றும் மில்ரோய் பெரேரா (Milroy Perera) ஆகியோரைக் கைது செய்யுமாறும் மஹர நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        