கொழும்பில் மூடப்படும் முக்கிய வீதி - சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு
கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையான பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, நாளை (01) இரவு 10.00 மணி முதல் மறுநாள் (02) மாலை 05.00 மணி வரை அந்தப் பகுதி மூடப்படும். சாலையை சுற்றி வசிப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
திருத்தப் பணி காரணமாக வீதி மூடல்
இந்த காலப்பகுதியில் கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் கொதட்டுவ நகரத்திலிருந்து கொட்டிகாவத்தை சந்தியிலிருந்து வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொலன்னாவ வழியாக அவிசாவளை வீதிக்கு திரும்ப முடியும்.
மேலும், அவிசாவளையில் இருந்து வரும் வாகனங்கள் கொட்டிகாவத்தை சந்தி, கொதடுவ நகரம், கொலன்னாவை, வெல்லம்பிட்டிய சந்தி ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்க முடியும்.
கடுவெல முதல் ஒருகுடவத்தை வரையிலான நிலத்தடி நீர் குழாய் அமைப்பு தயாரிக்கும் பணியின் காரணமாக இந்த வீதி மூடப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
