மோட்டார் சைக்கிள்களில் சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்
மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியில் டிக் டொக் காணொளியை எடுக்க முயற்சித்த இளைஞர்கள் காரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்து ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் 4 மோட்டார் சைக்கிள்களுடன் கொழும்பு பிரதேசத்தில் இருந்து ஹொரணை பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் செலுத்தி காணொளி எடுக்க முனைந்த போது இரு இளைஞர்கள் செலுத்திய மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
குறித்த விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 இளைஞர்களில் 2 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 2 இளைஞர்கள் 3 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri