சுமந்திரன் விரைவாக வெளியேறலாம்! ஆதங்கப்படும் தொண்டன்
சுமந்திரன் இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழரசுக் கட்சியை விட்டு விலகிச் சென்றுவிடுவார் இதனால் சட்ட நுணுக்கம் தெரிந்த இளையோருக்கு கட்சி வாய்ப்பளிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக சம்பந்தனை ஓய்வு பெற வேண்டும் என கோரிய சுமந்திரன் இன்று குகதாசனை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்துள்ளமை முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், குழப்பநிலை காரணமாக தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர் தெரிவு இடைநிறுத்தப்பட்டது 100% சரியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் செயலாளர் போட்டியில் இருந்து விலகியமைக்கு காரணம் தற்போதைய தலைவர் சிறீதரன் பதவியை விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டமையே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
