ரிசானாவும், ஹிசாலினியும் வறுமையின் கொடுமையால் வாழ்விழந்த சகோதரிகள்!
சவுதி அரேபியாவிற்கு வறுமை காரணமாக சென்று மரண தண்டனை விதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் ரிசானாவும், கொழும்புக்கு வந்த மலையக சிறுமி ஹிஷாலினிக்கும் வறுமையே காரணமென புரிந்துக்கொள்ளப்படாதவரை இந்நாடு உருப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேஷன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்து வந்த நிலையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டு அங்கே உயிரிழந்த, கிழக்கிலங்கை மூதூர் கிராமத்தின் ஓர் ஏழை முஸ்லிம் குடும்பத்து சிறுமியான ரிசானா நபிக்கும், 2020ம் ஆண்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டு இங்கே உயிரிழந்த மலையகத்து டயகம கிராமத்தின் ஓர் ஏழை தமிழ் குடும்பத்து சிறுமியான ஹிஷாலினி யூட்குமாரும் வறுமை என்ற கொடுமையால் வாழ்விழந்த சகோதரிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா தவாத்மி நகரில் 2005ம் ஆண்டு தாம் பணிப்புரிந்த வீட்டில் 4 மாத குழந்தைக்கு புட்டிப்பால் வழங்குகையில் ஏற்பட்ட மரணத்துக்கு ரிஷானாவே பொறுப்பு என்று கூறப்பட்டு, அவருக்கு டவடாமி மேல் நீதி மன்றத்தினால் மரண தன்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.