டெங்கு தொற்று நோயாக உருவாகும் அபாயம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெங்கு ஒரு தொற்று நோயாக உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக உடலியல் நிபுணர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், கம்பஹா, கொழும்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2022 மே மாத இறுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,206 ஆக இருந்த நிலையில் இந்தாண்டு இதுவரை 31,098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 6,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவதாக அதிக நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதோடு, அந்த மாவட்டத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1,262 ஆகும்.
இதன்படி, டெங்கு நோய் தொற்று நோயாக உருவாகும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
