மக்கள் நலன் சார்ந்த கட்சியிலேயே பயணிப்பேன்: முன்னாள் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் கருத்து
எந்தக் கட்சி மக்கள் நலன் சார்ந்து செயற்படுகிறதோ அந்த கட்சியில் இணைந்து பயணிக்க தயாராக உள்ளதாக சமூக சேவகரும் முன்னாள் மொட்டுக் கட்சி (SLPP) முக்கியஸ்தருமான றிஸ்லி முஸ்தபா (Rizli Mustafa) தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் களம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடும்போது,
“மொட்டு கட்சியிலிருந்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக போட்டியிட்ட நான் கணிசமான அளவு வாக்குகளை பெற்றேன்.
மக்களின் தேவைகள்
ஆனால் தற்பொழுது நடுநிலையாகவே பயணித்து வருகிறேன். ஏனென்றால் எமது மக்களின் அவா நிறைவேற்றப்பட வேண்டும்.
மக்களின் தேவைகள் பிரதேச அபிவிருத்தி, மக்களின் ஒற்றுமை போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அதற்கு ஏற்றாற்போல் எந்தக் கட்சி மக்கள் நலன் சார்ந்து செயற்படுகிறதோ அந்த கட்சியில் இணைந்து பயணிக்க தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

இஸ்ரேலுக்கு உதவினால்... பிரித்தானியா உட்பட மூன்று நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான் News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
