மீண்டும் அதிகரித்துள்ள அரிசி விலை
அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
நாட்டு அரிசி, சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகளின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியின் மொத்த விலை 255 ரூபாயாகவும், சம்பா அரிசி 260 ரூபாயாகவும், கீரி சம்பா 275 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு
மேலும், அரிசியின் அளவுக்கான விலைக் கட்டணத்தை வங்கியில் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தையில் நாட்டு அரிசியின் கட்டுப்பாட்டு விலை ரூ.220, சம்பா ரூ.230, கீரி சம்பா ரூ.260, என்றவாறு விற்பனை செய்ய நுகர்வோர் சேவை அதிகாரசபை சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது.
அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை அவ்வப்போது அதிகரிப்பதால் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்க முடியாமல் தவிப்பதாக அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் நாட்டு அரிசியை ரூ.235-240, சம்பா ரூ.250, கீரி சம்பா ரூ.260-265 என மொத்த விலையில் வியாபாரிகளுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam