நியூஸிலாந்தின் கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல்: ஏற்றுமதிக்கு தடை
நியூஸிலாந்தின் (New Zeland) தென் தீவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல், நோய்க்கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, அனைத்து கோழி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிட்டதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
Ktago பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற கோழி பண்ணையில் ui7N6 துணை வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நியூசிலாந்து அரசாங்கம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இது உலகளவில், மனிதர்களில் பரவுவதற்கான அச்சத்தை எழுப்பிய ui7N6 விவகாரத்திலிருந்து வேறுபட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
எனினும், கோழிப் பண்ணைகளில் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்று நியூஸிலாந்தின் உயிரியல் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நன்கு சமைத்த முட்டை மற்றும் கோழிப் பொருட்களை உட்கொள்வது பாதுகாப்பானது என்று அது கூறியுள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில், நாட்டுக்கான கோழி இறைச்சி உட்பட்ட பொருட்கள் தாய்லாந்து, பிரேசில், சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீன தாய்பே ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri