முன்னாள் போராளியான ஐங்கரனின் கைது பழிவாங்கலே! - மனைவி குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - நாகர்கோயில் பிரதேசத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான ஐங்கரனின் கைது பழிவாங்கல் என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
நாகர்கோயில் பிரதேசத்தில் சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் போராளியொருவர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 28/05/2021 கைது செய்யப்பட்டிருந்தார்.
தனது கணவர் இராணுவ புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்க உடனடியாக நாகர்கோவில் இராணுவ முகாமிற்கு கொண்டு சென்றனர்.
இதன்போது தாம் அங்கு சென்ற போது தமது கரவலை வாடியை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனது கணவர் கரவலை வாடிக்கு அழைத்து வரப்பட்டு அங்கு இராணுவம் மற்றும் பொலிஸார் சோதனையிட்டனர். அங்கிருந்த ஒரு சிறிய பிளாஸ்டிக் கொள்கலனை வெளியே கொண்டுவந்து அதற்குள் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.பின்பு அதனை தமக்கு காண்பிக்குமாறு கோரிய போது அதனை உங்களுக்கு காண்பிக்க முடியாது என்று காண்பிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,கடந்த 2020 ம் ஆண்டு வருடப்பிறப்பு அன்று நொதியால் சென்ற இராணுவம் தனது கணவர் உட்பட பலருடன் திராட்டில் ஈடுபட்டதாகவும், அதன் திட்டமிட்ட பழிவாங்கல் நிகழ்வே இக்கைது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கணவரை விடுதலை செய்வதற்கு உதவ முடிந்தவர்கள் உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
