சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய
சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய திருப்பொழிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்றையதினம் (02.03.2024) சிலாபம் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பொழிவு செய்யப்பட்டுள்ளார்.
அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய 1997 ஆம் சிலாபம் மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியதுடன் உரோம் ஊர்பானியான பல்கலைக்கழகத்தில் திரு அவை சட்டத்துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றார்.
மேலும் இவர் மறைமாவட்ட நீதித்துறை ஆயர் பதில்குருவாகவும் மற்றும் அம்பிட்டிய தேசிய குருமடத்தில் 2013லிருந்து 2019 வரை இறையியல் கற்கைநெறி பீடத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.