நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதா திங்கட்கிழமை அமைச்சரவையில்
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவை, திங்கட்கிழமை (27) அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கான இறுதி முடிவு நேற்று முன்தினம் இரவு (24) எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்துக் கணிப்பு
இது தொடர்பில் நேற்று முன்தினம் இரவு (24) பெலவத்தை ஜே.வி.பி. தலைமையகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
ஜேவிபி-யின் உயர்மட்டத் தலைவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலில், எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம் கொடுக்கத் தயார் நிலையுடன், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை மேலும் தாமதமின்றி கொண்டுவர வேண்டும் என்று இறுதியாக முடிவு செய்யப்பட்டது.

அப்போது, அடுத்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் குறித்த திருத்த மசோதாவைக் கொண்டுவருவது பொருத்தமாக இருக்காதா என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஓய்வுபெற்ற பிறகு யாரையும் நம்ப முடியாது என்று அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதன்படி, அரசியலமைப்பின் 22வது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும்.
வர்த்தமானி வெளியிடப்பட்டு குறைந்தபட்சம் 14 நாட்கள் கடந்த பிறகு, அரசியலமைப்பின் 22வது திருத்தம் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 7 நாட்களுக்குள், எந்தவொரு பிரஜைக்கும் தொடர்புடைய வரைவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர வாய்ப்பு வழங்கப்படும்.
உச்ச நீதிமன்றம் அந்த மனு மீதான தனது கருத்தை 14 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் வழங்க வேண்டும்.
அதன்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடரவும், அது குறித்த அறிவிப்பை வெளியிடவும் சுமார் 35 நாட்கள் ஆகும் என்று கருதப்படுகின்றது.
அதன் பிறகு, அது குறித்த நாடாளுமன்ற விவாதமும், தேவைப்பட்டால் பொதுமக்கள் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்படும்.
இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 15 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan