ஓய்வுபெற்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் யானை தாக்கி மரணம்
திருகோணமலை - எத்தாபெந்திவெவ பகுதியில் ஓய்வுபெற்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் யானை தாக்கி இன்று உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான
டபிள்யூ.தஸநாயக்க (63வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதுருவெவ எனும் இடத்திலுள்ள வயலுக்கு சென்று துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் போதே யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்தில் இருப்பதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.