பதவியிலிருந்து விலகுங்கள்! நீதி அமைச்சரிடம் கூட்டமைப்பு கோரிக்கை
நடைமுறை நாடாளுமன்ற அமர்கள் முடியும் முன்னர் பதவியிலிருந்து விலகுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர் ,
“பதவியிலிருந்து விலக முயற்சிப்பதாகவும், எனினும், பதவியிலிருந்து விலக முடியவில்லை என்று சமூகத்தில் கூறுவது நகைச்சுவையாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு நீதி அமைச்சர் தான் எவ்வாறு பதவி விலக வேண்டும் என்று தெரியாத அளவிற்கு அரசாங்கத்தின் தலையீடு நீதி அமைச்சுக்குள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.