சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வாகனங்களில் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று(திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை பறக்கவிடுமாறு தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் கட்டடங்களை எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் ஒளி விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என தேசிய பாதுகாப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி பொது இடங்கள், அரச திணைக்கள வளாகங்கள் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய நலன் கருதி மரக்கன்றுகளை நடுகை செய்வது குறித்து பரிசீலிக்க அர ச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
